என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீஸ்காரர் உள்பட 6 பேரிடம் வழிப்பறி- வாலிபர்கள் உள்பட 5 பேர் சிக்கினர்
Byமாலை மலர்16 Oct 2018 4:11 PM GMT (Updated: 16 Oct 2018 4:11 PM GMT)
சேலத்தில் போலீஸ்காரர் உள்பட 6 பேரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஓமலூர் பகுதியில் கடந்த 6-ந்தேதி இரவு சேலம் மாநகர ஆயுதப்படை போலீஸ்காரர் செல்லக்கண்ணு உள்பட 6 பேரிடம் மர்ம கும்பல் வழிப்பறி செய்தது.
மேலும் சிலரை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த நகை, பணம், மோட்டார் சைக்கிள், செல்போன் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றது. இந்த கும்பலை பிடிக்க போலீஸ் கமிஷனர் சங்கர் 2 தனிப்படைகள் அமைத்தார்.
இந்த தனிப்படை போலீசாரின் பிடியில் தற்போது சந்தேகத்தின் பேரில் ஓமலூர் பகுதியை சேர்ந்த 4 பேரும், சூரமங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரும் சிக்கி இருக்கிறார்கள். இவர்களுக்கும், சம்பவத்தன்று கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா?, இவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் திருட்டு, கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளனவா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிக்கிய 5 பேரில் சிலர் வாலிபர்கள் ஆவார்கள். ரகசிய இடத்தில் வைத்து நடைபெறும் இந்த விசாரணையில் மர்ம கும்பலை பற்றிய பல்வேறு விபரங்கள் வெளியாகலாம் என தெரிகிறது. #tamilnews
சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஓமலூர் பகுதியில் கடந்த 6-ந்தேதி இரவு சேலம் மாநகர ஆயுதப்படை போலீஸ்காரர் செல்லக்கண்ணு உள்பட 6 பேரிடம் மர்ம கும்பல் வழிப்பறி செய்தது.
மேலும் சிலரை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த நகை, பணம், மோட்டார் சைக்கிள், செல்போன் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றது. இந்த கும்பலை பிடிக்க போலீஸ் கமிஷனர் சங்கர் 2 தனிப்படைகள் அமைத்தார்.
இந்த தனிப்படை போலீசாரின் பிடியில் தற்போது சந்தேகத்தின் பேரில் ஓமலூர் பகுதியை சேர்ந்த 4 பேரும், சூரமங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரும் சிக்கி இருக்கிறார்கள். இவர்களுக்கும், சம்பவத்தன்று கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா?, இவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் திருட்டு, கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளனவா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிக்கிய 5 பேரில் சிலர் வாலிபர்கள் ஆவார்கள். ரகசிய இடத்தில் வைத்து நடைபெறும் இந்த விசாரணையில் மர்ம கும்பலை பற்றிய பல்வேறு விபரங்கள் வெளியாகலாம் என தெரிகிறது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X