search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை அருகே போர்வெல் போடும் வாகனத்தில் இருந்து விழுந்து டிரைவர் பலி
    X

    தஞ்சை அருகே போர்வெல் போடும் வாகனத்தில் இருந்து விழுந்து டிரைவர் பலி

    தஞ்சை அருகே போர்வெல் போடும் வாகனத்தில் இருந்து விழுந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த கரந்தை கொடிக்காலூர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 43). இவர் போல்வெல் போடும் வாகன டிரைவராக உள்ளார். இந்த நிலையில் பால்ராஜ் சம்பவத்தன்று தஞ்சை அடுத்த புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பைபாஸ் சாலையில் பத்துக்கட்டு என்ற பகுதியில் ஒரு வீட்டில் போர் வெல் போடுவதற்காக வாகனத்தை ஓட்டி சென்றார்.

    அப்போது வீட்டின் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பால்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தஞ்சை நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×