என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதலமைச்சர் பதவி விலக வைகோ வலியுறுத்தல் - அவசியமில்லை என்கிறார் தமிழிசை
Byமாலை மலர்13 Oct 2018 5:10 AM GMT (Updated: 13 Oct 2018 5:10 AM GMT)
சிபிஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார். ஆனால், அதற்கு அவசியம் இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami #Vaiko #TamilisaiSoundararajan
சென்னை:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளதை மதிமுக சார்பில் வரவேற்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
‘நெடுஞ்சாலைத்துறை ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. எனவே அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். ஊழல் அரசுக்கு முட்டுக்கொடுக்க நினைப்பவர்களை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’ என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
ஆனால், ஊழல் குற்றச்சாட்டு சொன்ன உடன் பதவி விலக வேண்டும் என்ற அவசியமில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அதேசமயம், முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். #HighwaysTendersScam #EdappadiPalaniswami #Vaiko #TamilisaiSoundararajan
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளதை மதிமுக சார்பில் வரவேற்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
‘நெடுஞ்சாலைத்துறை ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. எனவே அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். ஊழல் அரசுக்கு முட்டுக்கொடுக்க நினைப்பவர்களை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’ என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
ஆனால், ஊழல் குற்றச்சாட்டு சொன்ன உடன் பதவி விலக வேண்டும் என்ற அவசியமில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அதேசமயம், முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். #HighwaysTendersScam #EdappadiPalaniswami #Vaiko #TamilisaiSoundararajan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X