search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்பம் பகுதியில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் சித்ரவதை
    X

    கம்பம் பகுதியில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் சித்ரவதை

    கம்பத்தில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண்ணை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    கம்பம் பஸ் நிலையம் அருகே உள்ள பாரதியார் தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி மகள் மதுமிதா (வயது26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலு மகன் புவனேஷ் என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்தின்போது 40 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன. திருமணமான சில நாட்களிலேயே மதுமிதாவிடம் மேலும் ரூ.20 லட்சம் வாங்கி வரச்சொல்லி வற்புறுத்தி உள்ளனர்.

    இதில் ரூ10 லட்சத்தை தாய் வீட்டில் இருந்து மதுமிதா வாங்கி கொடுத்துள்ளார். மேலும் ரூ.10 லட்சத்தை வாங்கி வரச்சொல்லி உள்ளனர்.

    தாமதமானதால் புவனேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மதுமிதாவை கொடுமைப்படுத்தி உள்ளனர். சம்பவத்தன்று புவனேஷ், மதுமிதாவை தாக்கி மிரட்டி உள்ளார்.

    இது குறித்து தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனிடம் மதுமிதா புகார் அளித்தார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுபடி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் புவனேஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×