search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல்லில் செல்போன் திருடிய சிறுவர் உள்பட 3 பேர் கைது
    X

    நாமக்கல்லில் செல்போன் திருடிய சிறுவர் உள்பட 3 பேர் கைது

    நாமக்கல்லில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் திருடிய சிறுவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மோகனூர் சாலையில் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனியே சென்ற அந்த பெண்ணை நோட்டமிட்ட 3 பேர் அவரிடம் உள்ள செல்போனை பறித்து தப்பி ஓடினர்.

    இது குறித்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நாமக்கல் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் நாமக்கல் இன்ஸ்பெக்டர் குலசேகரன் விசாரணை நடத்தியதில் நாமக்கல், சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டம்பட்டிமேடு பகுதியை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளியின் மகன் 2 பேர் மற்றும் அவருடைய நண்பர் சக்திவேல் (22) என்ற 3 பேர் திருடியது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து செல்போன் மீட்கப்பட்டது.

    சிறுவர்கள் 2 பேரையும் சேலத்தில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சக்திவேல் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×