என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மாமல்லபுரம் அருகே ஆஸ்பத்திரிக்கு கணவர் அழைத்து செல்லாததால் மனைவி தற்கொலை
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி கலனியை சேர்ந்தவர் அரிகுமார். இவரது மனைவி சவுமியா (வயது 22) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக சவுமியாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும்படி கணவர் அரிகுமாரிடம் கூறி வந்தார். ஆனால் அவர் மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவில்லை.
இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சவுமியா மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்.
இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த சவுமியா மண்ணெய் தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று மாலை சவுமியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்