search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரம் அருகே ஆஸ்பத்திரிக்கு கணவர் அழைத்து செல்லாததால் மனைவி தற்கொலை
    X

    மாமல்லபுரம் அருகே ஆஸ்பத்திரிக்கு கணவர் அழைத்து செல்லாததால் மனைவி தற்கொலை

    மாமல்லபுரம் அருகே ஆஸ்பத்திரிக்கு கணவர் அழைத்து செல்லாததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி கலனியை சேர்ந்தவர் அரிகுமார். இவரது மனைவி சவுமியா (வயது 22) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக சவுமியாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும்படி கணவர் அரிகுமாரிடம் கூறி வந்தார். ஆனால் அவர் மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவில்லை.

    இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சவுமியா மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்.

    இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த சவுமியா மண்ணெய் தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று மாலை சவுமியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×