search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரளம் அருகே தூக்குப்போட்டு மாணவி தற்கொலை
    X

    பேரளம் அருகே தூக்குப்போட்டு மாணவி தற்கொலை

    பேரளம் அருகே வயிற்று வலி தாங்க முடியாமல் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    நன்னிலம்:

    பேரளம் அருகே உள்ள நல்லிச்சேரி மெயின்ரோட்டை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகள் நாகநந்தினி (வயது 16). இவர் பூந்தோட்டம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாகநந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவருடைய தாய் செல்வராணி பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×