search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சி அருகே மரத்தின் மீது கார் மோதல்- வாலிபர் உடல் நசுங்கி பலி
    X

    செஞ்சி அருகே மரத்தின் மீது கார் மோதல்- வாலிபர் உடல் நசுங்கி பலி

    மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விழுப்புரம்:

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரேம்ராஜ்(வயது 21). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் ஜெகன்(37), கிரண்(24), பிரபாகரன்(21) ஆகிய 3 பேருடன் ஒரு காரில் புதுவைக்கு வந்தார்.

    பின்னர் அவர் தனது நண்பர்களுடன் அங்கிருந்து நேற்று இரவு காரில் வேலூருக்கு புறப்பட்டார். காரை பிரேம்ராஜ் ஓட்டிவந்தார். அந்த கார் நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வளத்தி அருகே உள்ள வடவெட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது பிரேம்ராஜின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலைஓரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் காரின்முன்பகுதி முற்றிலும் நொறுங்கி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பிரேம்ராஜ் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    காரில் வந்த ஜெகன், கிரண், பிரபாகரன் ஆகிய 3 பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த  இன்ஸ்பெக்டர் குமாரபாலன், சப்-இன்ஸ்பெக்டர் சக்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×