search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூசி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
    X

    தூசி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

    தூசி அருகே பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    தூசி:

    தூசியை அடுத்த மாமண்டூரை சேர்ந்தவர் கண்ணபிரான் (வயது 65), விவசாயி. இவரது மனைவி பத்மினி. இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கண்ணபிரான் கடந்த சில தினங்களாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மனமுடைந்த அவர் வயலுக்கு சென்று, அங்கு வைத்து இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார். வயலுக்கு சென்ற தந்தை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது மகன் வெங்கடேசன் அங்கு சென்று பார்த்தார். அப்போது கண்ணபிரான் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கண்ணபிரானை காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×