என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாற்றுதிறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்
Byமாலை மலர்1 Oct 2018 11:50 AM GMT (Updated: 1 Oct 2018 11:50 AM GMT)
பென்னாகரத்தை அடுத்துள்ள குட்டூரில் வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டு இருந்த 11 வயது மாற்று திறனாளி சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த சிறுவன், பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்துள்ள அலேபுரம் பகுதி குட்டூரை சேர்நத கூலித்தொழிலாளி தன் மனைவியுடன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் மாற்று திறனாளியான தனது 11 வயது மகளை கிருஷ்ணகிரியில் உள்ள கிறிஸ்தவ காப்பக பள்ளியில் சேர்த்துள்ளார்.
கடந்த 21-ந் தேதி சிறுமியின் பாட்டி பள்ளி விடுமுறையில் தனது பேத்தியை சொந்த ஊரான குட்டூருக்கு அழைத்து வந்தார். அப்போது சிறுமி தன் வீட்டுக்கு பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சிறுமியின் பாட்டி பென்னாகரம் போலீசில் புகார் தெரிவித்ததையடுத்து இன்ஸ்பெக்டர் சிறுவனை பிடித்து விசாரித்ததில் உண்மையை சிறுவன் ஒப்புக்கொண்டான். இதனால் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து சேலம் சிறார் சிறையில் அடைத்தனர்.
சிறுவனுடைய தந்தைக்கும், சிறுமியின் பாட்டிக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த முன்விரோதத்தின் காரணமாக இந்த சிறுவன், மாற்று திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பானோ? என்ற அச்சம் அந்த பகுதி பொதுமக்களிடம் ஏற்பட்டு உள்ளது. #tamilnews
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்துள்ள அலேபுரம் பகுதி குட்டூரை சேர்நத கூலித்தொழிலாளி தன் மனைவியுடன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் மாற்று திறனாளியான தனது 11 வயது மகளை கிருஷ்ணகிரியில் உள்ள கிறிஸ்தவ காப்பக பள்ளியில் சேர்த்துள்ளார்.
கடந்த 21-ந் தேதி சிறுமியின் பாட்டி பள்ளி விடுமுறையில் தனது பேத்தியை சொந்த ஊரான குட்டூருக்கு அழைத்து வந்தார். அப்போது சிறுமி தன் வீட்டுக்கு பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சிறுமியின் பாட்டி பென்னாகரம் போலீசில் புகார் தெரிவித்ததையடுத்து இன்ஸ்பெக்டர் சிறுவனை பிடித்து விசாரித்ததில் உண்மையை சிறுவன் ஒப்புக்கொண்டான். இதனால் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து சேலம் சிறார் சிறையில் அடைத்தனர்.
சிறுவனுடைய தந்தைக்கும், சிறுமியின் பாட்டிக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த முன்விரோதத்தின் காரணமாக இந்த சிறுவன், மாற்று திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பானோ? என்ற அச்சம் அந்த பகுதி பொதுமக்களிடம் ஏற்பட்டு உள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X