என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பேரையூர் அருகே பெண்ணை தாக்கி நகை பறிப்பு
பேரையூர்:
பேரையூர் அழகர்சாமி நகரைச் சேர்ந்தவர் திருச்சிற்றம்பலம், கூட்டுறவு சங்க செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மினி (வயது55). இவர்களது வீடு நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ளது.
நேற்று கணவன்-மனைவி இருவரும் படுத்திருந்தனர். அப்போது ஏதோ சத்தம் கேட்டு பத்மினி எழுந்தார். வீட்டின் பின்புறம் வந்து பார்த்தபோது 2 மர்ம நபர்கள் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வந்து பின்பக்க கதவை உடைத்து கொண்டிருந்தனர்.
இதனை கண்டு பத்மினி அதிர்ச்சி அடைந்து சத்தம் எழுப்ப முயன்றார். அதற்குள் பூட்டை உடைத்து விட்ட மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் பத்மினியின் தலையில் தாக்கினர்.
இதில் அவர் படுகாயம் அடைந்து கீழே விழுந்த போது மர்ம நபர்கள் பத்மினியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து பேரையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்