search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Peraiyur woman attack"

    பேரையூர் அருகே இரும்பு கம்பியால் பெண்ணை தாக்கி நகையை மர்ம மனிதர்கள் பறித்து சென்றனர்.

    பேரையூர்:

    பேரையூர் அழகர்சாமி நகரைச் சேர்ந்தவர் திருச்சிற்றம்பலம், கூட்டுறவு சங்க செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மினி (வயது55). இவர்களது வீடு நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ளது.

    நேற்று கணவன்-மனைவி இருவரும் படுத்திருந்தனர். அப்போது ஏதோ சத்தம் கேட்டு பத்மினி எழுந்தார். வீட்டின் பின்புறம் வந்து பார்த்தபோது 2 மர்ம நபர்கள் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வந்து பின்பக்க கதவை உடைத்து கொண்டிருந்தனர்.

    இதனை கண்டு பத்மினி அதிர்ச்சி அடைந்து சத்தம் எழுப்ப முயன்றார். அதற்குள் பூட்டை உடைத்து விட்ட மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் பத்மினியின் தலையில் தாக்கினர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்து கீழே விழுந்த போது மர்ம நபர்கள் பத்மினியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து பேரையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×