என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூரில் 3 மணி நேரம் பலத்த மழை
திருப்பூர்:
திருப்பூரில் கடந்த 2 நாட்களாக பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு திருப்பூரில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. அதிகாலை 3 மணி வரை இந்த மழை விட்டு விட்டு கொட்டி தீர்த்தது.
கனமழை காரணமாக திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. அவினாசி சாலை, ஊத்துக்குளி சாலை, ஈஸ்வரன் கோவில் பாலம், எம்.ஜி.ஆர். சிலை ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். இதேபோல் தாராபுரம், பல்லடம், மூலனூர், காங்கயம், உடுமலை, அவினாசி, ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.
திருப்பூரில் 33 மி.மீ, காங்கயத்தில் 33 மி.மீ., தாராபுரம் 5.2 மி.மீ., மூலனூர் 8 மி.மீ., உடுமலை 3.20 மி.மீ., அவினாசி 28 மி.மீ., பல்லடத்தில் 19 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
திருப்பூரில் இன்று காலை வெயில் அடிக்க தொடங்கியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்