என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாஸ் கைது செய்யப்பட்டது குறித்து அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் கடிதம்
Byமாலை மலர்25 Sep 2018 3:21 AM GMT (Updated: 25 Sep 2018 3:21 AM GMT)
திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் கைது பற்றிய தகவல்களை அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், சபாநாயகர் ப.தனபால் தபால் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் என்று சட்டசபை வட்டாரம் தெரிவித்தது. #SpeakerDhanapal #Karunas
சென்னை:
தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகக் குற்றம்சாட்டி திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாசை, அவரது சாலிகிராமம் வீட்டில் வைத்து 23-ந் தேதியன்று போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் அடுத்த மாதம் அக்டோபர் 5-ந் தேதிவரை நீதிமன்றக் காவலில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டால், சட்டசபை விதிகளின்படி அதுகுறித்து சபாநாயகரிடம் போலீசார் மற்றும் சிறைத்துறையினர் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த வகையில், சபாநாயகர் ப.தனபாலுக்கு, கருணாஸ் எம்.எல்.ஏ. கைது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தபால் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
அதுபோல கருணாஸ் அடைக்கப்பட்டு இருக்கும் சிறையின் விவரங்கள் பற்றி சிறைத்துறை ஐ.ஜி., சபாநாயகர் ப.தனபாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். சபாநாயகருக்கு தபால் மூலம் வரப்பெற்ற கடிதங்களில், கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கான காரணம், அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் சட்டப்பிரிவுகள், அவர் அடைக்கப்பட்டு இருக்கும் சிறை பற்றிய விவரங்கள் உள்ளன.
எம்.எல்.ஏ. கைது பற்றிய தகவல்களை அவை விதிகளின்படி, மற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், சபாநாயகர் தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், சபாநாயகர் ப.தனபால் தபால் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் என்று சட்டசபை வட்டாரம் தெரிவித்தது. இதில், இ-மெயில் தகவல்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. #SpeakerDhanapal #Karunas
தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகக் குற்றம்சாட்டி திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாசை, அவரது சாலிகிராமம் வீட்டில் வைத்து 23-ந் தேதியன்று போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் அடுத்த மாதம் அக்டோபர் 5-ந் தேதிவரை நீதிமன்றக் காவலில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டால், சட்டசபை விதிகளின்படி அதுகுறித்து சபாநாயகரிடம் போலீசார் மற்றும் சிறைத்துறையினர் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த வகையில், சபாநாயகர் ப.தனபாலுக்கு, கருணாஸ் எம்.எல்.ஏ. கைது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தபால் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
அதுபோல கருணாஸ் அடைக்கப்பட்டு இருக்கும் சிறையின் விவரங்கள் பற்றி சிறைத்துறை ஐ.ஜி., சபாநாயகர் ப.தனபாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். சபாநாயகருக்கு தபால் மூலம் வரப்பெற்ற கடிதங்களில், கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கான காரணம், அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் சட்டப்பிரிவுகள், அவர் அடைக்கப்பட்டு இருக்கும் சிறை பற்றிய விவரங்கள் உள்ளன.
எம்.எல்.ஏ. கைது பற்றிய தகவல்களை அவை விதிகளின்படி, மற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், சபாநாயகர் தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், சபாநாயகர் ப.தனபால் தபால் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் என்று சட்டசபை வட்டாரம் தெரிவித்தது. இதில், இ-மெயில் தகவல்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. #SpeakerDhanapal #Karunas
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X