என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவைப்பட்டால் ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு நடத்தப்படும் - ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வால்
Byமாலை மலர்23 Sep 2018 3:41 PM GMT (Updated: 23 Sep 2018 3:41 PM GMT)
தேவைப்பட்டால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆய்வு குழு தலைவர் தருண் அகர்வால் தெரிவித்துள்ளார். #ThoothukudiSterlite #TarunAgarwal
சென்னை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று தூத்துக்குடிக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் கொட்டப்படும் இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது மதிமுக பொது செயலாளர் வைகோவும் உடனிருந்தார்.
இந்நிலையில், ஆய்வு குழுவினர் இன்று மாலை தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பினர். சென்னையில் தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் குழு தலைவர் தருண் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலை, கிராமங்கள், கழிவு கொட்டப்பட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அனைத்து தரப்பு கருத்துக்களையும் முழுமையாக கேட்டறிந்த பின்னரே, பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
தேவைப்பட்டால் ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக சென்னையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார். #ThoothukudiSterlite #TarunAgarwal
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X