search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி அவதூறு பேச்சு: எச்.ராஜா மீது திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு
    X

    அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி அவதூறு பேச்சு: எச்.ராஜா மீது திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு

    அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி அவதூறு பேசிய எச்.ராஜாவை கைது செய்ய கோரி திருவாரூர் போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
    திருவாரூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேசும் போது, அறநிலையத் துறை அதிகாரிகளை பற்றி அவதூறாக பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தொடர்ந்து அவதூறாக பேசி வரும் எச்.ராஜாவை கைது செய்ய கோரி அறநிலையத்துறையினர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்து வருகின்றனர்.

    இதேபோல் திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்திலும் எச்.ராஜாவை கைது செய்ய கோரி அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன் ஒரு புகார் மனு கொடுத்தார்.

    அதில் அறநிலையத்துறை அதிகாரிகளை பற்றியும், வீட்டு பெண்களை பற்றியும் இழிவாக கொச்சைப்படுத்தி எச்.ராஜா பேசியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    தொடர்ந்து பல்வேறு அவதூறாக பேசி வரும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி திருவாரூர் டவுன் போலீசார், எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது அரசு ஊழியர்களை தரக்குறைவாக பேசியது, பெண் வன்கொடுமை, அரசு ஊழியர்களை அச்சுறுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் தொடர்ந்து போலீஸ் நிலையங்களில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது பா.ஜனதா கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×