என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாயில் நெருப்பை ஊதி சாகசம் செய்த மாணவன் பலி
Byமாலை மலர்21 Sep 2018 10:11 AM GMT (Updated: 21 Sep 2018 10:13 AM GMT)
வாயில் நெருப்பை ஊதி சாகசம் செய்த மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
சென்னை ஊரப்பாக்கம் அய்யஞ்சேரியைச் சேர்ந்தவர் ஜான் வின்சென்ட். இவரது மகன் ஜெபின் (வயது16). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் வாயில் மண்எண்ணெய் ஊற்றி நெருப்பை ஊதி பெரிதாக்கும் சாகச நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்தார். அது போலவே தானும் சாகசம் நிகழ்த்த முடிவு செய்தார்.
அதன்படி மாணவர் ஜெபின் தீப்பந்தம் ஒன்றை கையில் பிடித்துக் கொண்டார். தனது வாயில் மண்எண்ணெய் ஊற்றி தீப்பந்தம் மீது வேகமாக ஊதினார். அப்போது மண்எண்ணெய் அவர் உடல் முழுவதும் பட்டதால் தீப்பிடித்துக் கொண்டது.
உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெபின் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X