என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம் - கமல்
Byமாலை மலர்19 Sep 2018 3:54 AM GMT (Updated: 19 Sep 2018 4:56 AM GMT)
பாராளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார். #Kamal #MakkalNeedhiMaiam
ஆலந்தூர்:
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சென்னையில் இருந்து கோவை செல்வதற்காக இன்று காலை விமான நிலையம் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி பொறுப்பாளர்களுக்கு தனி பயிலரங்கம் நடந்து கொண்டு இருக்கிறது. அரசியல் தெரிந்த வல்லுனர்கள் அதை நடத்தி கொண்டு வருகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயாராகி கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசையை கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவரை பா.ஜ.க.வினர் தாக்கி இருப்பது அரசியல் மாண்பு அல்ல.
அரசியலில் உள்ளவர்களுக்கு விமர்சனம் வரும். அதற்கு தாக்குதல் என்பது பதிலாக இருக்கக்கூடாது. அரசியல் விமர்சனமே இருக்கக்கூடாது என்ற நிலை மாறிக்கொண்டு இருக்கிறது. மக்கள் கேள்வி கேட்பார்கள். கேட்டே ஆக வேண்டும் என்ற அந்த ஒரு மாண்பு தான் இந்திய அரசியலில் இருந்து வந்தது.
காந்தி, பெரியார், அண்ணா போன்றவர்கள் இந்த விமர்சனங்களை மிக சாதாரணமாக ஏற்றுக்கொண்டு அதற்கான பதில்களை அறிவுப்பூர்வமாக சொல்லி நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். அந்த வழியில் தான் நாம் நடக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Kamal #MakkalNeedhiMaiam
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சென்னையில் இருந்து கோவை செல்வதற்காக இன்று காலை விமான நிலையம் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி பொறுப்பாளர்களுக்கு தனி பயிலரங்கம் நடந்து கொண்டு இருக்கிறது. அரசியல் தெரிந்த வல்லுனர்கள் அதை நடத்தி கொண்டு வருகிறார்கள்.
எங்கள் பொறுப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் அது பெரும் பாடம் கல்வியாக இருக்கிறது. மற்ற கட்சிகள் அதை ஆலோசனை கூட்டமாக நடத்துவார்கள். நாங்கள் அதை நேரமாக மாற்றி கொண்டிருக்கிறோம். சிறந்த அரசியல் அறிஞர்கள் அதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
அரசியலில் உள்ளவர்களுக்கு விமர்சனம் வரும். அதற்கு தாக்குதல் என்பது பதிலாக இருக்கக்கூடாது. அரசியல் விமர்சனமே இருக்கக்கூடாது என்ற நிலை மாறிக்கொண்டு இருக்கிறது. மக்கள் கேள்வி கேட்பார்கள். கேட்டே ஆக வேண்டும் என்ற அந்த ஒரு மாண்பு தான் இந்திய அரசியலில் இருந்து வந்தது.
காந்தி, பெரியார், அண்ணா போன்றவர்கள் இந்த விமர்சனங்களை மிக சாதாரணமாக ஏற்றுக்கொண்டு அதற்கான பதில்களை அறிவுப்பூர்வமாக சொல்லி நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். அந்த வழியில் தான் நாம் நடக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Kamal #MakkalNeedhiMaiam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X