என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்18 Sep 2018 10:43 AM GMT (Updated: 18 Sep 2018 10:43 AM GMT)
தேனி அருகே காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகள் வினோரதி (வயது19). இவரும் அதே பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் மகனும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு அலெக்சாண்டர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வினோரதி புகார் அளித்தார். போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க கூறினர்.
வீட்டிற்கு வந்த பிறகு ரூ.5லட்சம் பணம் கொடுத்தால்தான் திருமணத்திற்கு சம்மதிப்போம் என்று அலெக்சாண்டர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வினோரதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு அங்கு சிசிக்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகள் வினோரதி (வயது19). இவரும் அதே பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் மகனும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு அலெக்சாண்டர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வினோரதி புகார் அளித்தார். போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க கூறினர்.
வீட்டிற்கு வந்த பிறகு ரூ.5லட்சம் பணம் கொடுத்தால்தான் திருமணத்திற்கு சம்மதிப்போம் என்று அலெக்சாண்டர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வினோரதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு அங்கு சிசிக்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X