என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொண்டி அருகே டிராக்டர் மோதி மாணவி பலி
Byமாலை மலர்17 Sep 2018 10:53 AM GMT (Updated: 17 Sep 2018 10:53 AM GMT)
தொண்டி அருகே பள்ளி மாணவி விபத்தில் பலியான சம்பவம் எஸ்.பி.பட்டினம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டினம் மேல தெருவைச் சேர்ந்தவர் அப்துல்ரகீம். இவரது மகள் சுபைலாபானு (வயது7). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை மாணவி சுபைலாபானு வீட்டில் இருந்து வழக்கம்போல பள்ளிக்கு புறப்பட்டார். அவர் தெருவில் நடந்தபோது அங்கு நின்ற டிராக்டர் பின்னோக்கி வந்தது.
டிராக்டர் டிரைவர் மாணவியை கவனிக்காததால் அவர் மீது டிராக்டர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுபைலாபானு உடல் நசுங்கி பலியானார்.
விபத்து குறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலைமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பள்ளி மாணவி விபத்தில் பலியான சம்பவம் எஸ்.பி.பட்டினம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X