search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொண்டி அருகே டிராக்டர் மோதி மாணவி பலி
    X

    தொண்டி அருகே டிராக்டர் மோதி மாணவி பலி

    தொண்டி அருகே பள்ளி மாணவி விபத்தில் பலியான சம்பவம் எஸ்.பி.பட்டினம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டினம் மேல தெருவைச் சேர்ந்தவர் அப்துல்ரகீம். இவரது மகள் சுபைலாபானு (வயது7). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை மாணவி சுபைலாபானு வீட்டில் இருந்து வழக்கம்போல பள்ளிக்கு புறப்பட்டார். அவர் தெருவில் நடந்தபோது அங்கு நின்ற டிராக்டர் பின்னோக்கி வந்தது.

    டிராக்டர் டிரைவர் மாணவியை கவனிக்காததால் அவர் மீது டிராக்டர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுபைலாபானு உடல் நசுங்கி பலியானார்.

    விபத்து குறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலைமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பள்ளி மாணவி விபத்தில் பலியான சம்பவம் எஸ்.பி.பட்டினம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×