என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரடாச்சேரி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்15 Sep 2018 10:05 AM GMT (Updated: 15 Sep 2018 10:05 AM GMT)
ரெயில்வே தண்டவாளத்தில் காயத்துடன் ஆண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர்:
கொரடாச்சேரி அருகே ஒளிமதி என்ற இடத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகில் சம்பவத்தன்று தலையில் காயத்துடன் ஆண் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து கொரடாச்சேரி ரெயில் நிலைய அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தஞ்சாவூர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் காந்தி சடலத்தை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இறந்து கிடந்தவர் கருப்பு நிற வேட்டி, ஊதா நிற பனியனும் அணிந்துள்ளார். இறந்தவரின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இறந்தவர் யார்? ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X