என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருங்கல் அருகே கடன்தொல்லையால் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்12 Sep 2018 5:50 PM GMT (Updated: 12 Sep 2018 5:50 PM GMT)
கருங்கல் அருகே கடன்தொல்லையால் தொழிலாளி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருங்கல்:
கருங்கல் அருகே காரவிளையை சேர்ந்தவர் அமலதாஸ் (வயது 60) சலவை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அறையில் தூக்க சென்றார். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, அமலதாஸ், மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, கதவை உடைத்து உள்ளே சென்று பிணத்தை மீட்டனர்.
இதுகுறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கடன் தொல்லையால் அமலதாஸ் தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல் அருகே காரவிளையை சேர்ந்தவர் அமலதாஸ் (வயது 60) சலவை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அறையில் தூக்க சென்றார். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, அமலதாஸ், மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, கதவை உடைத்து உள்ளே சென்று பிணத்தை மீட்டனர்.
இதுகுறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கடன் தொல்லையால் அமலதாஸ் தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X