என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவாரூர் மாவட்டத்தில் 20-ந்தேதி வரை மீனவர்கள் நலவாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் மீனவர் நலவாரியத்தில் 6024 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் உறுப்பினர்களின் முழு விபரங்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே உறுப்பினராக உள்ள பயனாளிகளின் விபரங்களை 38 கலங்கள் அடங்கிய படிவத்தில் ஒவ்வொருவரும் பூர்த்தி செய்து கண்டிப்பாக அளிக்க வேண்டும். படிவம் அளிப்பவர்களின் விபரங்கள் மட்டுமே கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இதுவரை 2228 படிவங்கள் மட்டுமே பயனாளிகளிடமிருந்து பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 3796 உறுப்பினர்களிடமிருந்து 38 படிவம் பெறப்பட வேண்டும். ஆகையால், மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் தங்கள் விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்திட வருகிற 20-ந்தேதிக்குள் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு புதிய படிவத்தினை பூர்த்தி செய்து அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உரிய தேதிக்குள் புதிய படிவம் அளிக்காதவர்களின் விவரங்கள் மீனவர் நல வாரியத்திலிருந்து தானாகவே ரத்தாகிவிடும் அவர்கள் வரும் காலங்களில் புதிய உறுப்பினர்களாகவே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கலெக்டர் நிர்மல் ராஜ் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்