என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குட்கா ஊழல் - சேலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்12 Sep 2018 10:18 AM GMT (Updated: 12 Sep 2018 10:18 AM GMT)
குட்கா ஊழலில் நேர்மையான விசாரணையை மேற்கொண்டு துரித நடவடிக்கையில் சி.பி.ஐ. ஈடுபட வலியுறுத்தி சேலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் 18-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சேலம்:
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊழல் மலிந்த தமிழகமாக மாறியுள்ள சூழ்நிலையை கண்டித்தும், குட்கா ஊழலில் நேர்மையான விசாரணையை மேற்கொண்டு துரித நடவடிக்கையில் சி.பி.ஐ. அமைப்பு ஈடுபட வலியுறுத்தியும் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு சேலம் கிழக்கு, சேலம் மத்திய மாவட்டம், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி கண்டன உரை ஆற்றுகிறார். முன்னதாக அவர், 17-ந்தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சேலம் வருகிறார்.
இரவு 7 மணிக்கு மாவட்ட எல்லையான தலைவாசலில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு அவர் இரவு சேலத்தில் தங்குகிறார்.
ஆகவே, வருகிற 18-ந்தேதி காலையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊழல் மலிந்த தமிழகமாக மாறியுள்ள சூழ்நிலையை கண்டித்தும், குட்கா ஊழலில் நேர்மையான விசாரணையை மேற்கொண்டு துரித நடவடிக்கையில் சி.பி.ஐ. அமைப்பு ஈடுபட வலியுறுத்தியும் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு சேலம் கிழக்கு, சேலம் மத்திய மாவட்டம், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி கண்டன உரை ஆற்றுகிறார். முன்னதாக அவர், 17-ந்தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சேலம் வருகிறார்.
இரவு 7 மணிக்கு மாவட்ட எல்லையான தலைவாசலில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு அவர் இரவு சேலத்தில் தங்குகிறார்.
ஆகவே, வருகிற 18-ந்தேதி காலையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X