search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயுள்தண்டனை கைதியின் மனைவி, மகனுக்கு கொலை மிரட்டல்- பிரபல ரவுடி கைது
    X

    ஆயுள்தண்டனை கைதியின் மனைவி, மகனுக்கு கொலை மிரட்டல்- பிரபல ரவுடி கைது

    வாணரப்பேட்டையில் ஆயுள்தண்டனை கைதியின் மனைவி மற்றும் மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டை பிரான்சுவா தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பஸ் நிலையத்தில் நடந்த சகாயராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக ஜெயிலில் உள்ளார்.

    ஜெயிலில் அடைக்கப்பட்ட பிரேம்குமாரை அவரது மனைவி காயத்ரி அவ்வப்போது பார்க்க செல்லும் போது பிரபல ரவுடியான நேதாஜி நகரை சேர்ந்த ஜெனாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த ஜெனா அடிக்கடி காயத்ரி வீட்டுக்கு சென்று வந்தார். இதுகாயத்ரியின் மகன் வசந்துக்கு பிடிக்கவில்லை. வசந்த் தனது தாயை கண்டித்ததுடன் ஜெனாவை வீட்டுக்கு வரவேண்டாம் என்று கூறுமாறு அறிவுறுத்தினார்.

    மகனின் அறிவுறுத்தலை ஏற்று காயத்ரி, ஜெனாவிடம் வீட்டுக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் வசந்த் மீது ஜெனா ஆத்திரம் அடைந்தார். நேற்று மாலை காயத்ரி வீட்டுக்கு சென்ற ஜெனா அங்கிருந்த வசந்த்தையும், காயத்ரியையும் தாக்கினார். மேலும் பீர்பாட்டிலை உடைத்து இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதுகுறித்து காயத்ரி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து ஜெனாவை கைது செய்தனர். #tamilnews
    Next Story
    ×