search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வளவனூர் அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட வாலிபர் மீது தாக்குதல்- 4 பேர் கைது
    X

    வளவனூர் அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட வாலிபர் மீது தாக்குதல்- 4 பேர் கைது

    வளவனூர் அருகே ரூ.500 கொடுத்த கடனை திருப்பி கேட்ட வாலிபர் மீது கொலை மிரட்டல் விடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விழுப்புரம்:

    வளவனூர் அருகே கல்லிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ், (வயது 23) இவரிடம் அதேப்பகுதியை சேர்ந்த சேதுராமன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.500 கடன் வாங்கினார். இந்த பணத்தை சந்திரபோஸ் கேட்டார். இதனால் சேதுராமனோடு வாய் தகராறு ஏற்பட்டது.

    இதைபார்த்த சேதுராமன் உறவினர்கள் கலியமூர்த்தி, வனிதா, ஜெயமணி, விஜயசாந்தி ஆகியோர் சந்திரபோசை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து வளவனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கலியமூர்த்தி உட்பட 4 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×