search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி  அருகே விஷம் குடித்து கார் டிரைவர் தற்கொலை
    X

    திருச்சி அருகே விஷம் குடித்து கார் டிரைவர் தற்கொலை

    திருச்சி அருகே மன உளைச்சல் காரணமாக கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பொன்மலைப்பட்டி:

    திருச்சி மேலகல்கண்டார்கோட்டை வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ரகுநாதன்(வயது 52). கார் டிரைவர். இவர் நீண்ட காலமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து ஒரு கை விரல் அகற்றப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரகுநாதன், மது பழக்கத்திற்கு அடிமையானார். மீண்டும் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தபோது, மீண்டும் 2 விரல்களை அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

    இதனால், வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று இரவு விஷம் குடித்து, மேலகல்கண்டார்கோட்டையில் உள்ள திரு.வி.க. திடலில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×