search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை விளாச்சேரியில் குடும்ப தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை
    X

    மதுரை விளாச்சேரியில் குடும்ப தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை

    குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துகிறது.

    பேரையூர்:

    மதுரை விளாச்சேரியை அடுத்த மொட்டமலை ஆதி சிவன் நகரைச் சேர்ந்தவர் ஜெய மாயவேலு, பெயிண்டர். இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 30).

    இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்தது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தனலட்சுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    உடல் கருகிய அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தனலட்சு மியின் சகோதரர் பால் பாண்டி கொடுத்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருமங்கலம் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    இதேபோல் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாரபத்தியைச் சேர்ந்தவர் சின்னவைரம் (45), தொழிலாளி. மது பழக்கத்திற்கு அடிமையான இவர், குடித்துவிட்டு வந்ததாக மனைவி ஆண்டிச்சி கண்டித்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த சின்ன வைரன் வி‌ஷம் குடித்து மயங்கினார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கூடக் கோவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×