search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rto investigation"

    • உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
    • அந்த நிலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனியார் ஒருவர் விற்பனைக்கு வாங்கி உள்ளார்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த ஆண்டியகவுண்டனூர் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் ஜம்புக்கல் மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வழங்கப்பட்டது.

    பின்னர் நிலத்தை பெற்றவர்கள் சந்தித்த பல்வேறு இடர்பாடுகளால் அதில் திறம்பட சாகுபடி பணிகளை மேற்கொள்ள இயலவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் அந்த நிலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனியார் ஒருவர் விற்பனைக்கு வாங்கி உள்ளார். அதன் பின்பு அவர் அதில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதாக தெரிகிறது.

    இந்த சூழலில் மலைப்பகுதியில் நிலத்தை கிரையம் பெற்ற தனியார் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி உடுமலை ஆர்.டி.ஓ.விடம் பொதுமக்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் 2 தரப்பினரையும் உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டிய கவுண்டனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தினார். இதில் ஒரு சிலர் விசாரணைக்கு ஆஜராக வில்லை.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்"ஜம்புக்கல் மலை விவகாரம் தொடர்பாக நீண்ட நாட்களாக விவாதம் நடைபெற்று வருகிறது. அதன் பேரில் விசாரணை மேற்கொண்டது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதில் உண்மை நிலையை கண்டறிந்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியதும் அவசியமாக உள்ளது" என்றனர். இந்த நிகழ்வின் போது உடுமலை தாசில்தார் சுந்தரம், மண்டல துணை தாசில்தார் சந்திரசேகர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர்,பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரம்யாவை சுரண்டை அருகே உள்ள ராஜ கோபாலபேரியை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
    • சில நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டில் இருந்தபோது,ரம்யா திடீரென மண்எண்ணையை குடித்துவிட்டார் என விசாரணையில் தெரியவந்தது.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள ஆய்குடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு ரம்யா என்ற மகள் உள்ளார்.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரம்யாவை சுரண்டை அருகே உள்ள ராஜ கோபாலபேரியை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். தொடர்ந்து கர்ப்பமான அவருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் நேற்று பெற்றோர் வீட்டுக்கு சென்ற ரம்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த ஆய்குடி போலீசார் ரம்யா உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். ரம்யா குழந்தை பெற்றதில் இருந்து சற்று மனதளவில் பாதிப்படைந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டில் இருந்தபோது, திடீரென மண்எண்ணையை குடித்துவிட்டார்.

    இதனால் அவருக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பார்க்குமாறு கூறி அவரது கணவர் ரம்யாவை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். தொடர்ந்து ரம்யாவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் தான் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் கூட முடிவடையாத காரணத்தினால் தென்காசி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட உள்ளது.

    கரிவலம்வந்தநல்லூர் அருகே இளம்பெண் துக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    சங்கரன்கோவில்:

    கரிவலம்வந்தநல்லூரை அடுத்த பாறைப்பட்டியை சேர்ந்தவர் சுந்தரம் (55). இவரது மகள் கற்பகவள்ளி (27). இவருக்கும் காரிசாத்தானை சேர்ந்த வெள்ளத்துரை என்பவருக்கும் இடையே கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

    இந்நிலையில் வெள்ளத்துரை, கற்பகவள்ளியை அவரது பெற்றோர் வீட்டாருடன் பேசக்கூடாது என சொல்லி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் அவர் யாருடன் போனில் பேசினாலும் சந்தேகப்பட்டு தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் சுந்தரத்தின் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு கற்பகவள்ளியை அவர் அழைத்திருந்தாராம். இதற்கு முதலில் செல்ல அனுமதி அளித்த வெள்ளத்துரை நிகழ்ச்சி நடைபெறும் அன்று செல்லக்கூடாது என சொல்லி விட்டாராம். இதில் மனமுடைந்த கற்பகவள்ளி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் முடிந்து 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துகிறது.

    பேரையூர்:

    மதுரை விளாச்சேரியை அடுத்த மொட்டமலை ஆதி சிவன் நகரைச் சேர்ந்தவர் ஜெய மாயவேலு, பெயிண்டர். இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 30).

    இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்தது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தனலட்சுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    உடல் கருகிய அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தனலட்சு மியின் சகோதரர் பால் பாண்டி கொடுத்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருமங்கலம் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    இதேபோல் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாரபத்தியைச் சேர்ந்தவர் சின்னவைரம் (45), தொழிலாளி. மது பழக்கத்திற்கு அடிமையான இவர், குடித்துவிட்டு வந்ததாக மனைவி ஆண்டிச்சி கண்டித்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த சின்ன வைரன் வி‌ஷம் குடித்து மயங்கினார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கூடக் கோவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×