என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கனமழை காரணமாக முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 142 அடி வரை உயர்ந்தது. ஆனால் அதன்பின்பு மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 137.10 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 606 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து 2207 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இந்த நீர்பாசனத்திற்கு போக வைகை அணையை வந்தடைகிறது.
அணையின் நீர்மட்டம் 69.13 அடியாக உள்ளது. நீர்வரத்து 1895கனஅடியாக உள்ளது. மதுரை குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2030 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 41.75 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 116.06 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 3.8, கூடலூர் 1.3, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 1.6, வீரபாண்டி 6, வைகை அணை 3, மஞ்சளாறு 4, சோத்துப்பாறை 3, கொடைக்கானல் 4.6 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.
மேலும் தேனி மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் இரவு முழுவதும் சாரல் மழை தொடர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்