search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலனுடன் ஓட்டம் எதிரொலி- இளம்பெண்களை வேலைக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம்
    X

    காதலனுடன் ஓட்டம் எதிரொலி- இளம்பெண்களை வேலைக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம்

    இளம்பெண்கள் அதிகளவில் காதலனுடன் ஓட்டம் பிடிப்பதால் வேலைக்கு அனுப்ப பெற்றோர் தயங்கி வருகின்றனர்.

    வடமதுரை:

    வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மில்கள் உள்ளன. இங்கு கிராமங்களை சேர்ந்த இளம்பெண்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். மில்லில் வேலை பார்க்கும் வாலிபர்கள் மற்றும் வேன் டிரைவர்கள் இளம்பெண்களிடம் ஆசைவார்த்தை காதல் வலை வீசுகின்றனர்.

    பருவவயது என்பதால் பெண்களும் இளைஞர்களின் காதல் வலையில் விழுந்துவிடுகின்றனர். இதேபோல் அய்யலூர் பகுதியில் உள்ள பள்ளியில் இருந்து மாணவிகள் அதிகளவில் மாயமாகின்றனர். பின்பு காதலனுடன் திருமணம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைகின்றனர். இளம் வயது என்பதால் எதிர்கால வாழ்க் கைப்பற்றி சிந்திக்காமல் காதல் வயப்படுகின்றனர்.

    இதனைபயன்படுத்தி ஒரு சில வாலிபர்கள் தங்களின் ஆசை தீர்ந்தவுடன் அப்பெண்களை ஏமாற்றிச்செல்கின்றனர். இதனால் விரக்கியடைந்து தற்கொலை முடிவுக்கும் பெண்கள் செல்கின்றனர்.

    இளம்பெண்கள் மாயமாவதும், பின்பு காதலனுடன் தஞ்சமடைவதும் தொடர்கதையாகி வருவதால் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்லும் பெண்களை ஒருசில வாலிபர்கள் ஏமாற்றிச் செல்கின்றனர். எனவே வேலைக்கு செல்லும் இடங்களில் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×