search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் 19 வயது பெண்ணை காதலித்த 17 வயது வாலிபர் தற்கொலை
    X

    சேலத்தில் 19 வயது பெண்ணை காதலித்த 17 வயது வாலிபர் தற்கொலை

    சேலத்தில் 19 வயது பெண்ணை வாலிபர் காதலித்து வந்தார். அந்த பெண் காதலை ஏற்க மறுத்ததால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் கடத்திகுட்டை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் தட்சிணாமூர்த்தி (வயது 17).இவர் சேலம் எருமாபாளையம் பகுதியில் உள்ள ஒரு டையிங் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

    அதே நிறுவனத்தில் பணிபுரிந்த 19 வயது பெண் ஒருவரை தட்சிணாமூர்த்தி கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார்.இந்த நிலையில் அந்த பெண் தட்சிணாமூர்த்தியின் காதலை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த தட்சிணாமூர்த்தி நிறுவனத்தின் அருகில் தங்கியிருந்த அறையில் இன்று காலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சேலம் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×