என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகூர் மீரான் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அனுதாபம்
Byமாலை மலர்28 Aug 2018 7:42 AM GMT (Updated: 28 Aug 2018 7:42 AM GMT)
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான நாகூர் மீரான் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #ADMK #Edappadipalaniswami #OPanneerSelvam
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நாகூர்மீரான் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரம் அடைந்தோம்.
1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கடையநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்ற நாகூர் மீரான் புரட்சித் தலைவி தலைமையில் அமைந்த முதலாவது அரசில், அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
அன்புச் சகோதரர் நாகூர் மீரானை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் மல்லிகா, ஆற்காடு ஒன்றியம், கீழ் மின்னல் ஊராட்சி கழகச் செயலாளர் முத்து, காட்டுமன்னார் கோயில் ஒன்றியம், தொண்டமாநத்தம் கிளைக் கழகச் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் மரணம் அடைந்து விட்ட செய்தி கேட்டும், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் விவசாயப் பிரிவு பொருளாளரும், வெளியம்பாக்கம் ஊராட்சி கழகச் செயலாளருமான ஏழுமலை சாலை விபத்தில் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றோம்.
இவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து மரணம் அடைந்தோரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ADMK #Edappadipalaniswami #OPanneerSelvam
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நாகூர்மீரான் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரம் அடைந்தோம்.
1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கடையநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்ற நாகூர் மீரான் புரட்சித் தலைவி தலைமையில் அமைந்த முதலாவது அரசில், அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
அன்புச் சகோதரர் நாகூர் மீரானை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் மல்லிகா, ஆற்காடு ஒன்றியம், கீழ் மின்னல் ஊராட்சி கழகச் செயலாளர் முத்து, காட்டுமன்னார் கோயில் ஒன்றியம், தொண்டமாநத்தம் கிளைக் கழகச் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் மரணம் அடைந்து விட்ட செய்தி கேட்டும், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் விவசாயப் பிரிவு பொருளாளரும், வெளியம்பாக்கம் ஊராட்சி கழகச் செயலாளருமான ஏழுமலை சாலை விபத்தில் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றோம்.
இவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து மரணம் அடைந்தோரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ADMK #Edappadipalaniswami #OPanneerSelvam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X