search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராசிபுரத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்
    X

    ராசிபுரத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்

    ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் அறிவுரையின்படி ராசிபுரம் புதிய பஸ் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பூபதி, செங்கோடன் ஆகியோர் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிந்து செல்வதால், விபத்தில் மரணத்தை தவிர்க்கலாம் என்பது குறித்தும், வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச் செல்வது பற்றியும், விபத்தில் உயிர் பலியை தடுக்க இரு சக்கர வாகனத்தை ஓட்டுச் செல்பவர்களின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். 
    Next Story
    ×