search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எழுமாத்தூர் கலை கல்லூரியை முற்றுகையிட்ட மாணவர்கள்
    X

    எழுமாத்தூர் கலை கல்லூரியை முற்றுகையிட்ட மாணவர்கள்

    சக மாணவர் தற்கொலைக்கு நீதி கேட்டு போராடியதன் விளைவாக கல்லூரிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்கள் எழுமாத்தூர் கலை கல்லூரியை முற்றுகையிட்டனர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் மலையடிவாரத்தில் அரசு கலை கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் படித்து வந்த நடுப்பாளையத்தை சேர்ந்த மாணவர் தினேஷ் குமார் (30). திடீரென தற்கொலை செய்து கொண்டார். மாணவர் சக மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டதால் கடந்த 3 மாதத்துக்கு முன் கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் இதேபோல் ஏற்பட்ட தகராறில் 2-வது தடவையாக மாணவர் தினேஷ்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனால் மாணவர் தினேஷ் 2 தினங்களுக்கு முன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சஸ்பெண்டு செய்யப்பட்டதால் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    இதையொட்டி மாணவ- மாணவிகள் தினேஷ்குமார் தற்கொலைக்கு காரணமான கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரின்ஸ்பாலை கைது செய்ய வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மாணவர்களின் போராட்டம் காரணமாக இன்று முதல் 5 நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று கல்லூரிக்கு வந்த மாணவர்கள் கல்லூரி மூடப்பட்டதை கண்டித்தும் பிரின்ஸ்பாலை கைதுசெய்ய கோரியும் கல்லூரி முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு பணிக்காக போலீசார் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

    மேலும் கல்லூரிக்கு போக பஸ்சில் இருந்து இறங்கி 2 கி.மீட்டர் தூரம் நடத்துதான் போக வேண்டும் ஆகவே பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரியும் மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×