என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்காதல் விவகாரம்- மனைவியை கொன்று ஆற்றில் உடலை வீசிய கணவர்
Byமாலை மலர்27 Aug 2018 6:36 AM GMT (Updated: 27 Aug 2018 6:36 AM GMT)
நாகையில் கள்ளக்காதலை விவகாரத்தில் வாலிபர் துணையுடன் மனைவியை கொன்று ஆற்றில் வீசிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கிள்ளுக்குடியில் உள்ள பாண்டவையாற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் பிணமாக மிதந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த வலிவலம் போலீசார், அங்கு சென்று பெண் உடலை மீட்டனர். அப்போது அந்த பெண்ணின் கழுத்து பகுதி துணியால் நெரிக்கப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதி விசாரணையை துரிதப்படுத்தினர். இதுதொடர்பாக வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அவர் கிள்ளுக்குடியை அடுத்த கடலாகுடி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி குஞ்சுபிள்ளை (வயது57) என்பவருடைய மனைவி மாரியம்மாள் (42) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து குஞ்சு பிள்ளையிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர் மனைவி இறந்த சோகம் இல்லாமல் பதில் கூறினார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே மனைவி உடலை பாண்டவையாற்றில் பார்த்து விட்டு குஞ்சுபிள்ளை எதுவும் தெரியாதது போல் சென்றதும் தெரிய வந்தது. இதனால் குஞ்சுபிள்ளையிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதல் விவகாரத்தில் மாரியம்மாளை, குஞ்சுபிள்ளை கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.
மாரியம்மாள், பல ஆண்களுடன் நெருங்கி பழகி வந்தார். இது பின்னர் கள்ளத்தொடர்பாக மாறியது. இதனால் மாரியம்மாள், கள்ளத்தொடர்பால் பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் மாரியம்மாள் நீண்ட நேரம் கழித்து வீட்டுக்கு வந்ததாகவும் தெரிகிறது.
இதனால் குஞ்சுபிள்ளை, மாரியம்மாளிடம் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறினார். ஆனால் அவர் கேட்காமல் வாக்குவாதம் செய்து வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த குஞ்சுபிள்ளை, சம்பவத்தன்று மனைவி மாரியம்மாளை, கடலாகுடியை சேர்ந்த தினேஷ்குமார் (19) என்ற வாலிபர் துணையுடன் கழுத்தை துணியால் நெரித்துக்கொலை செய்துள்ளார். பின்னர் மனைவி உடலை பாண்டவையாற்றில் வீசி சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து குஞ்சு பிள்ளையும், கொலைக்கு உறுதுணையாக இருந்த தினேஷ்குமாரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X