என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் வெள்ளப் பாதிப்பு - வயநாட்டில் 219 முகாம்களில் பொதுமக்கள் தஞ்சம்
Byமாலை மலர்20 Aug 2018 7:40 AM GMT (Updated: 20 Aug 2018 7:40 AM GMT)
கேரளாவில் தென்மேற்கு பருபமழையால் வீடுகளை இழந்த 27 ஆயிரம் பேர் வயநாட்டில் உள்ள 219 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கூடலூர்:
கேரளாவில் கடந்த 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பெய்த கன மழை மாநிலத்தையே புரட்டிபோட்டது. வீடுகளை இழந்த 7 லட்சம் பேருக்கு மேல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரியொட்டியுள்ள கேரள மாநிலம் வயநாட்டில் 219 முகாம்களில் 27 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாடு பகுதியில் கனமழையுடன், நீர் இடி, அணை திறப்பு ஆகியவைகளால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புக்குள் புகுந்தது.
மானந்தவாடி அருகே பிலாக்காவு, பூசாரிக்கொல்லியில் நீர் இடி விழுந்தது. இதனால் 200 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். மானந்தவாடி, பனமரம், வண்டியாம்பேட்டை ஆகிய பகுதிகளில் 18 நாட்களாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
கால்நடைகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்சென்றன. தற்போது வயநாடு பகுதியில் 219 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 27 ஆயிரத்து 267 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் வெளியே வர முடியாத மற்றும் பேரிடர் மீட்புக்குழு செல்லாத மானந்தவாடி எஸ்டேட் பகுதியில் சேவா பாரதி தன்னார்வலர்கள் மீட்பு மற்றும் உணவுப்பொருட்களை வழங்கினர்.
இந்த பகுதியில் மழை தற்போது குறைந்து காணப்பட்டாலும் நீர் இடி ஆபத்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருப்பதால் மேலும் பாதிப்படையலாம் என்று அஞ்சப்படுகிறது.
புரட்டிபோட்ட மழையால் கேரள மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகள் சேதம் அடைந்து துண்டிக்கப்பட்டது.
பாலக்காடு- மலம்புலா சாலை, பாலக்காடு- திருச்சூர் சாலை, பாலக்காடு பொன்னானி சாலை, மண்ணார்க்காடு- கோவை சாலை, திருச்சூர்- எர்ணாகுளம், மூணாறு- மறையூர்- உடுமலை சாலை, ஆலப்புழா- மாவேலிக்கரை சாலை என பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பெய்த கன மழை மாநிலத்தையே புரட்டிபோட்டது. வீடுகளை இழந்த 7 லட்சம் பேருக்கு மேல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரியொட்டியுள்ள கேரள மாநிலம் வயநாட்டில் 219 முகாம்களில் 27 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாடு பகுதியில் கனமழையுடன், நீர் இடி, அணை திறப்பு ஆகியவைகளால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புக்குள் புகுந்தது.
மானந்தவாடி அருகே பிலாக்காவு, பூசாரிக்கொல்லியில் நீர் இடி விழுந்தது. இதனால் 200 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். மானந்தவாடி, பனமரம், வண்டியாம்பேட்டை ஆகிய பகுதிகளில் 18 நாட்களாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
கால்நடைகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்சென்றன. தற்போது வயநாடு பகுதியில் 219 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 27 ஆயிரத்து 267 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் வெளியே வர முடியாத மற்றும் பேரிடர் மீட்புக்குழு செல்லாத மானந்தவாடி எஸ்டேட் பகுதியில் சேவா பாரதி தன்னார்வலர்கள் மீட்பு மற்றும் உணவுப்பொருட்களை வழங்கினர்.
இந்த பகுதியில் மழை தற்போது குறைந்து காணப்பட்டாலும் நீர் இடி ஆபத்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருப்பதால் மேலும் பாதிப்படையலாம் என்று அஞ்சப்படுகிறது.
புரட்டிபோட்ட மழையால் கேரள மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகள் சேதம் அடைந்து துண்டிக்கப்பட்டது.
பாலக்காடு- மலம்புலா சாலை, பாலக்காடு- திருச்சூர் சாலை, பாலக்காடு பொன்னானி சாலை, மண்ணார்க்காடு- கோவை சாலை, திருச்சூர்- எர்ணாகுளம், மூணாறு- மறையூர்- உடுமலை சாலை, ஆலப்புழா- மாவேலிக்கரை சாலை என பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X