search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் வெள்ளப் பாதிப்பு - வயநாட்டில் 219 முகாம்களில் பொதுமக்கள் தஞ்சம்
    X

    கேரளாவில் வெள்ளப் பாதிப்பு - வயநாட்டில் 219 முகாம்களில் பொதுமக்கள் தஞ்சம்

    கேரளாவில் தென்மேற்கு பருபமழையால் வீடுகளை இழந்த 27 ஆயிரம் பேர் வயநாட்டில் உள்ள 219 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    கூடலூர்:

    கேரளாவில் கடந்த 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பெய்த கன மழை மாநிலத்தையே புரட்டிபோட்டது. வீடுகளை இழந்த 7 லட்சம் பேருக்கு மேல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நீலகிரியொட்டியுள்ள கேரள மாநிலம் வயநாட்டில் 219 முகாம்களில் 27 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாடு பகுதியில் கனமழையுடன், நீர் இடி, அணை திறப்பு ஆகியவைகளால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புக்குள் புகுந்தது.

    மானந்தவாடி அருகே பிலாக்காவு, பூசாரிக்கொல்லியில் நீர் இடி விழுந்தது. இதனால் 200 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். மானந்தவாடி, பனமரம், வண்டியாம்பேட்டை ஆகிய பகுதிகளில் 18 நாட்களாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    கால்நடைகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்சென்றன. தற்போது வயநாடு பகுதியில் 219 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 27 ஆயிரத்து 267 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் வெளியே வர முடியாத மற்றும் பேரிடர் மீட்புக்குழு செல்லாத மானந்தவாடி எஸ்டேட் பகுதியில் சேவா பாரதி தன்னார்வலர்கள் மீட்பு மற்றும் உணவுப்பொருட்களை வழங்கினர்.

    இந்த பகுதியில் மழை தற்போது குறைந்து காணப்பட்டாலும் நீர் இடி ஆபத்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருப்பதால் மேலும் பாதிப்படையலாம் என்று அஞ்சப்படுகிறது.

    புரட்டிபோட்ட மழையால் கேரள மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகள் சேதம் அடைந்து துண்டிக்கப்பட்டது.

    பாலக்காடு- மலம்புலா சாலை, பாலக்காடு- திருச்சூர் சாலை, பாலக்காடு பொன்னானி சாலை, மண்ணார்க்காடு- கோவை சாலை, திருச்சூர்- எர்ணாகுளம், மூணாறு- மறையூர்- உடுமலை சாலை, ஆலப்புழா- மாவேலிக்கரை சாலை என பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×