search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala People"

    கேரளாவில் தென்மேற்கு பருபமழையால் வீடுகளை இழந்த 27 ஆயிரம் பேர் வயநாட்டில் உள்ள 219 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    கூடலூர்:

    கேரளாவில் கடந்த 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பெய்த கன மழை மாநிலத்தையே புரட்டிபோட்டது. வீடுகளை இழந்த 7 லட்சம் பேருக்கு மேல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நீலகிரியொட்டியுள்ள கேரள மாநிலம் வயநாட்டில் 219 முகாம்களில் 27 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாடு பகுதியில் கனமழையுடன், நீர் இடி, அணை திறப்பு ஆகியவைகளால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புக்குள் புகுந்தது.

    மானந்தவாடி அருகே பிலாக்காவு, பூசாரிக்கொல்லியில் நீர் இடி விழுந்தது. இதனால் 200 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். மானந்தவாடி, பனமரம், வண்டியாம்பேட்டை ஆகிய பகுதிகளில் 18 நாட்களாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    கால்நடைகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்சென்றன. தற்போது வயநாடு பகுதியில் 219 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 27 ஆயிரத்து 267 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் வெளியே வர முடியாத மற்றும் பேரிடர் மீட்புக்குழு செல்லாத மானந்தவாடி எஸ்டேட் பகுதியில் சேவா பாரதி தன்னார்வலர்கள் மீட்பு மற்றும் உணவுப்பொருட்களை வழங்கினர்.

    இந்த பகுதியில் மழை தற்போது குறைந்து காணப்பட்டாலும் நீர் இடி ஆபத்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருப்பதால் மேலும் பாதிப்படையலாம் என்று அஞ்சப்படுகிறது.

    புரட்டிபோட்ட மழையால் கேரள மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகள் சேதம் அடைந்து துண்டிக்கப்பட்டது.

    பாலக்காடு- மலம்புலா சாலை, பாலக்காடு- திருச்சூர் சாலை, பாலக்காடு பொன்னானி சாலை, மண்ணார்க்காடு- கோவை சாலை, திருச்சூர்- எர்ணாகுளம், மூணாறு- மறையூர்- உடுமலை சாலை, ஆலப்புழா- மாவேலிக்கரை சாலை என பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
    கேரள மக்களுக்கு உதவுவதற்காக கோயம்பேடு வியாபாரிகள் வழங்கும் காய்கறிகள் லாரிகள் மூலம் கேரளாவில் உள்ள அன்னதான சத்திரத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. #KeralaRains #KeralaFloods
    சென்னை:

    கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை-வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.

    இவர்களுக்கு உதவ இந்தியாவில் உள்ள மக்கள் மட்டுமல்ல வெளிநாடுகளில் வசிப்பவர்களும் உதவி செய்து வருகின்றனர்.

    அங்கு முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு 3 நேரமும் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொரு வியாபாரிகளும் தன்னால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மொத்தம் 1889 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து ஒவ்வொரு வியாபாரிகளும் மூட்டை மூட்டையாக உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, கோஸ், கேரட், காலிபிளவர் என தங்களிடம் உள்ள காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    காய்கறி மார்க்கெட் சங்க தலைவர்கள் தியாகராஜன், சந்திரன், தனஞ்செழியன் ஆகியோர் கடை கடையாக காய்கறி மூட்டைகளை சேகரித்து லாரிகளில் அனுப்பி வருகின்றனர்.

    இதுபற்றி தியாகராஜன் கூறுகையில், “மார்க்கெட்டில் ஒவ்வொரு கடைக்காரர்களும் 1 மூட்டை, 2 மூட்டை, 5 மூட்டை அளவுக்கு இலவசமாக காய்கறிகள் தருவதாகவும் அதனால் 150 மூட்டை அளவுக்கு (6 டன்) சேர்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

    ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் துரைசங்கர் லாரி மூலம் இவற்றை கேரளாவில் உள்ள அன்னதான சத்திரத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார். #KeralaRains #KeralaFloods

    ×