என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகூர் அருகே 2 கிராமத்தினர் மீண்டும் மோதல்: 3 பேர் காயம்- 40 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்17 Aug 2018 12:13 PM GMT (Updated: 17 Aug 2018 12:13 PM GMT)
பாகூர் அருகே 2 கிராமத்தினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
பாகூர்:
பாகூர் அருகே மணப்பட்டு கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும், வார்க்கால் ஓடை புதுநகரை சேர்ந்த இளைஞர்களுக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்தது.
கடந்த 10-ந்தேதி கன்னியக்கோவிலில் நடந்த தீமிதி விழாவிலும் இந்த தகராறு காரணமாக 2 கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும் மோதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதல் தொடர்பாக 2 கிராமத்தை சேர்ந்த 25 பேர் மீது கிருமாம்பாக்கம் போலீசர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வார்க்கால் ஓடை புதுநகரை சேர்ந்த கனகேஸ்வரன் (28), தனது நண்பர் சதீஷ்குமாருடன் (18) மணப்பட்டு ரோடு- கன்னியக்கோவிலில் உள்ள ஒரு தனியார் கம்பெனிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அப்போது மணப்பட்டை சேர்ந்த சிவசங்கர், முத்தமிழ், கன்னியக்கோவில் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்ற மணிகண்டன் (23) ஆகியோர் சேர்ந்து கனகேஸ்வரனையும், சதீஷ்குமாரையும் தடியாலும், கல்லாலும் சரமாரியாக தாக்கினர். இதில் கனகேஸ்வரன், சதீஷ்குமார் காயம் அடைந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் லாஸ்பேட்டை புதுநகரை சேர்ந்த பிரதிபராஜ் உள்ளிட்ட சிலர் திரண்டு வந்து எதிர்தரப்பினரை தாக்கினர். இதில் மணி கண்டன் காயம் அடைந்தார். காயம் அடைந்த 3 பேரும் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசார் 2 கிராமத்தை சேர்ந்த 40 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து 2 கிராமத்தினரிடையே அடிதடி மோதல் ஏற்பட்டு வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. #tamilnews
பாகூர் அருகே மணப்பட்டு கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும், வார்க்கால் ஓடை புதுநகரை சேர்ந்த இளைஞர்களுக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்தது.
கடந்த 10-ந்தேதி கன்னியக்கோவிலில் நடந்த தீமிதி விழாவிலும் இந்த தகராறு காரணமாக 2 கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும் மோதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதல் தொடர்பாக 2 கிராமத்தை சேர்ந்த 25 பேர் மீது கிருமாம்பாக்கம் போலீசர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வார்க்கால் ஓடை புதுநகரை சேர்ந்த கனகேஸ்வரன் (28), தனது நண்பர் சதீஷ்குமாருடன் (18) மணப்பட்டு ரோடு- கன்னியக்கோவிலில் உள்ள ஒரு தனியார் கம்பெனிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அப்போது மணப்பட்டை சேர்ந்த சிவசங்கர், முத்தமிழ், கன்னியக்கோவில் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்ற மணிகண்டன் (23) ஆகியோர் சேர்ந்து கனகேஸ்வரனையும், சதீஷ்குமாரையும் தடியாலும், கல்லாலும் சரமாரியாக தாக்கினர். இதில் கனகேஸ்வரன், சதீஷ்குமார் காயம் அடைந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் லாஸ்பேட்டை புதுநகரை சேர்ந்த பிரதிபராஜ் உள்ளிட்ட சிலர் திரண்டு வந்து எதிர்தரப்பினரை தாக்கினர். இதில் மணி கண்டன் காயம் அடைந்தார். காயம் அடைந்த 3 பேரும் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசார் 2 கிராமத்தை சேர்ந்த 40 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து 2 கிராமத்தினரிடையே அடிதடி மோதல் ஏற்பட்டு வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X