என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிபோதையில் தண்ணீர் தொட்டியில் தூங்கிய தொழிலாளி தவறி விழுந்து நீரில் மூழ்கி பலி
Byமாலை மலர்17 Aug 2018 10:16 AM GMT (Updated: 17 Aug 2018 10:16 AM GMT)
கரிக்கலாம்பாக்கம் அருகே குடிபோதையில் தண்ணீர் தொட்டியில் தூங்கிய தொழிலாளி தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார்.
புதுச்சேரி:
கரிக்கலாம்பாக்கம் அருகே நத்தமேடு சடாகுளம் பகுதியை சேர்ந்தவர் தேவநாதன் (வயது54). கூலித்தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கம் உள்ள இவர் நேற்று மதுகுடித்துவிட்டு அதே பகுதியில் வாழை தோட்டத்தில் உள்ள மோட்டார் கொட்டகை தண்ணீர் தொட்டியில் படுத்து தூங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தார். இதில் நீரில் மூழ்கி தேவநாதன் பரிதாபமாக இறந்து போனார்.
அந்த வழியாக சென்றவர்கள் தண்ணீர் தொட்டியில் தேவநாதன் பிணமாக மிதப்பதைகண்டு மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X