search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ்-2 மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 12 புதிய பாடப்பிரிவுகள்- அமைச்சர் செங்கோட்டையன்
    X

    பிளஸ்-2 மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 12 புதிய பாடப்பிரிவுகள்- அமைச்சர் செங்கோட்டையன்

    பொறியியல் படிப்பிற்கான மோகம் குறைவதால் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 12 வகையான புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #TNMinister #Sengottaiyan
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

    விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையா க உயர்த்தும் பணியை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    பிளஸ்-2 மாணவர்களுக்கு வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் இந்த ஆண்டு லேப்-டாப் வழங்க முடியவில்லை. ஒரு மாத காலத்திற்குள் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.

    இதே போன்று விரைவில் அரசு வழங்கும் விலையில்லா சைக்கிளும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும். பிளஸ்-2 படித்து முடித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் பட்டய படிப்பிற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக 25 ஆயிரம் மாணவர்களை அரசு தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பட்டய படிப்பிற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 10 சதவீதம் பேருக்கு கண் பார்வை குறைபாடு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் அவர்களுக்கு பரிசோதனை செய்து கண் குறைபாடிற்கான சிகிச்சையை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேசினார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசால் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எல்.கே.ஜி.-யூ.கே.ஜி. வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது சமூக நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்துடன் இணைந்து நடைபெறும். இதில் மாணவர்களுக்கு முதல் பாடம் தமிழாகத்தான் இருக்கும். இரண்டாவது பாடமாக ஆங்கிலம் இருக்கும்.

    தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பிற்கான மோகம் குறைந்து வரும் வேளையில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 12 வகையான புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. அந்த பயிற்சியால் படித்து முடித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆசிரியர்கள் குறித்து தமிழக முதல்வர் கூறியுள்ள கருத்து குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டார். #TNMinister #Sengottaiyan
    Next Story
    ×