search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் மலைப்பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை
    X

    பாபநாசம் மலைப்பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

    பலத்த மழை மற்றும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாபநாசம் மலைப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    சிங்கை:

    பாபநாசம் மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று பாபநாசம் அணை நிரம்பியது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாமிரபரணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடும் வெள்ளம் காரணமாக தாமிரபரணி கரையோர மண்டபங்கள் மூழ்கியுள்ளன.

    பாபநாசம் மலைப்பகுதியில் அணைக்கு செல்லும் பாதையில் பழமையான பாலம் 1992-ம் ஆண்டில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்த பகுதியில் தற்போது புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே காரையார் கோவில் மற்றும் அணைபகுதிக்கு செல்ல 1992-ம் ஆண்டிலேயே தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.

    தற்போது இந்த பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக பாலத்தின் அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியே பொதுமக்கள் மற்றும் சுற்றுல பயணிகள், பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அகஸ்தியர் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாபநாசம் செக்போஸ்ட் இன்று காலை மூடப்பட்டது. இதன் காரணமாக மலையில் உள்ள மின்வாரிய ஊழியர்கள், காணிக்குடியிருப்பு கிராம மக்கள் நகருக்குள் வர முடியாமல் தவித்துள்ளனர்.
    Next Story
    ×