search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைவாசல் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    தலைவாசல் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

    தலைவாசல் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தலைவாசல்:

    தலைவாசலை அடுத்த சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ்குமார் (வயது 24). லாரி டிரைவர். திருமணம் ஆகாதவர். கடந்த 6-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது சதீஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார். அப்போது உறவினர்கள் அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×