என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் கனமழை - பொள்ளாச்சி, பாலக்காடு சாலை மூடல்
Byமாலை மலர்14 Aug 2018 10:11 AM GMT (Updated: 14 Aug 2018 10:11 AM GMT)
கேரளாவில் கனமழை பெய்து வருவதையொட்டி பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு செல்லும் வழித்தடங்கள் சேதம் ஆனாதால் பொள்ளாச்சி- பாலக்காடு சாலையை போலீசார் மூடிவிட்டனர். #KeralaFloods2018
கொழிஞ்சாம்பாறை:
குறிப்பாக கடந்த 48 மணி நேரம் பெய்த பேய் மழையால் பாலக்காடு மாவட்டம் தண்ணீரில் தத்தளிக்கிறது. நீர் வரத்து அதிகரிப்பால் மலம்புழா அணையின் ஷட்டர் 9 செ.மீட்டர் திறக்கப்பட்டது. நேற்று 9 செ.மீட்டரில் இருந்து திடீரென 36 செ.மீட்டர் திறக்கப்பட்டு தற்போது 45 செ.மீட்டருக்கு ஷட்டர் திறக்கப்பட்டது.
இதனால் அணையில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறி கல்பாத்தி ஆற்றில் ஓடுகிறது. கல்பாத்தி ஆற்றையொட்டி இருந்த 80 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது.
இது தவிர ஆழியாற்றில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டதால் சித்தூர் தாலுகாவில் உள்ள அனைத்து பாலங்கள் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் வெள்ளம் கிராமங்களை நோக்கி ஓடுகிறது. கிராமங்களில் பயிரிட்ட 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இது தவிர 30 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு செல்லும் வழித்தடங்கள் சேதம் ஆனாதால் பொள்ளாச்சி- பாலக்காடு சாலையை போலீசார் மூடிவிட்டனர். இதனால் எங்கு வழி உள்ளதோ அதில் பஸ் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. தொடர் மழையால் கடந்த 2 நாட்களாக மின் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது.
இன்னும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால் பாலக்காடு நகர மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
பாலக்காடு கலெக்டர் பாலமுரளி பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார். கனமழை பெய்வதால் சுற்றுலா பயணிகள் பாலக்காடு வரவேண்டாம் என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். #KeralaFloods2018
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X