search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Southwest moonsoon"

    • உற்பத்தியாளர்கள் கொண்டு வரப்படும் பட்டுக்கூடுகளின் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால் பட்டுக்கூடுகளின் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.பட்டுக்கூடுகள் மீது மழைநீர் படாதவாறு பராமரிக்க வேண்டும்.

    உடுமலை:

    பட்டு வளர்ச்சித்துறை சார்பில் கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு விற்பனை அங்காடி செயல்படுகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெண் பட்டுக்கூடுகளை விவசாயிகள் மற்றும் பட்டு வளர்ப்போர் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    உற்பத்தியாளர்கள் கொண்டு வரப்படும் பட்டுக்கூடுகளின் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பின் பதிவு செய்யப்பட்ட வியாபாரிகள் ஏல முறையில் பட்டுக்கூடுகளை வாங்கிச் செல்கின்றனர். தற்போது இம்மையத்துக்கு 700-1,000 கிலோ வரை பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வருகின்றன.

    குறைந்தபட்ச விலையாக ரூ.400க்கு துவங்கி 700 வரை விற்கப்படுகிறது. குறிப்பாக கோவையில் வளர்க்கப்படும் பட்டுக்கூடுகள் பிற மாவட்டங்கள், கர்நாடகா மாநிலங்களில் நல்ல விலைக்கு கிடைக்கிறது.

    பட்டுக்கூடு வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால் பட்டுக்கூடுகளின் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.பட்டுக்கூடுகள் மீது மழைநீர் படாதவாறு பராமரிக்க வேண்டும்.

    தரம் குறைந்தால் அதன் விலையும் குறையும். ஆகையால் பட்டுக்கூடுகளை பாதுகாப்புடன் விவசாயிகள் வளர்க்க வேண்டும் என்றனர்.

    தண்ணீரை சேமிக்க தமிழகம் முயற்சி செய்யவில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் புகார் கூறி உள்ளார். #Southwestmoonsoon #Karnatakarain #Cauvery

    பெங்களூரு:

    கடந்த 3 மாதங்களில் தமிழகத்துக்கு 87.3 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    அதாவது ஜூன் மாதத்தில் 9.2 டி.எம்.சி. நீரும், ஜூலை மாதத்தில் 31.9 டி.எம்.சி. நீரும், ஆகஸ்டு மாதத்தில் 46.2 டி.எம்.சி. நீரும் திறக்கப்பட்டு இருக்க வேண்டும். அதாவது ஒரு ஆண்டுக்கு 177.3 டி.எம்.சி. நீர் திறக்கப்பட வேண்டும்.

    ஆனால் வெள்ளம் காரணமாக கபிணி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரி நீரை அப்படியே கர்நாடக அரசு திறந்துவிட்டு உள்ளது.

    குறைந்தபட்சமாக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதமும், அதிகபட்சமாக 2 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீரை திறந்துவிட்டது. கடந்த 3 மாதங்களில் மட்டும் மொத்தம் 87.3 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு மொத்தம் 310.6 டி.எம்.சி. நீரை திறந்துவிட்டு உள்ளது. ஒரு ஆண்டுக்கு தரவேண்டிய காவிரி நீரை 3 மாதங்களுக்குள் திறந்துவிட்டு உள்ளது. அதுவும் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட 177.3 டி.எம்.சி. நீரை காட்டிலும் கூடுதலாக 133.3 டி.எம்.சி. நீரை திறந்து விட்டு உள்ளது.

    இந்த நீரில் 250 டி.எம்.சி.க்கும் மேலான நீர் வீணாக சென்று கடலில் கலந்து உள்ளது. இந்த நீரை தமிழகம் சேமிக்கவில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் புகார் கூறி உள்ளார்.

    இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் காலத்தில் காவிரியில் கூடுதர் நீர் கிடைக்கும் என்பது நடப்பு ஆண்டு பெய்த மழை மூலம் அனுபவமாக கிடைத்து உள்ளது. எனவே மின்சாரம் தயாரிப்பு, பெங்களூருவுக்கு குடிநீர் தருவது ஆகிய காரணங்களுக்காக மேகதாதுவில் அணை கட்ட வேண்டியது அவசியம் ஆகிறது. இந்த அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். அந்த அணை நீரை தமிழகமும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    மேகதாதுவில் அணை கட்டினால் 67 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும்.

    இந்த ஆண்டு தமிழகத்திற்கு வழங்கிய நீரை அந்த அரசு சேமிக்கவில்லை. வீணாக கடலில் சென்று கலந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரளாவில் கனமழை பெய்து வருவதையொட்டி பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு செல்லும் வழித்தடங்கள் சேதம் ஆனாதால் பொள்ளாச்சி- பாலக்காடு சாலையை போலீசார் மூடிவிட்டனர். #KeralaFloods2018
    கொழிஞ்சாம்பாறை:

    கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 50 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத வகையில் பெய்யும் கனமழைக்கு இதுவரை ஏராளமானோர் பலியானார்கள். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. சாலை, பாலம், ரெயில் தண்டவாளம், மின் கம்பங்கள் சேதமடைந்தன.

    குறிப்பாக கடந்த 48 மணி நேரம் பெய்த பேய் மழையால் பாலக்காடு மாவட்டம் தண்ணீரில் தத்தளிக்கிறது. நீர் வரத்து அதிகரிப்பால் மலம்புழா அணையின் ‌ஷட்டர் 9 செ.மீட்டர் திறக்கப்பட்டது. நேற்று 9 செ.மீட்டரில் இருந்து திடீரென 36 செ.மீட்டர் திறக்கப்பட்டு தற்போது 45 செ.மீட்டருக்கு ‌ஷட்டர் திறக்கப்பட்டது.

    இதனால் அணையில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறி கல்பாத்தி ஆற்றில் ஓடுகிறது. கல்பாத்தி ஆற்றையொட்டி இருந்த 80 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது.

    இது தவிர ஆழியாற்றில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டதால் சித்தூர் தாலுகாவில் உள்ள அனைத்து பாலங்கள் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் வெள்ளம் கிராமங்களை நோக்கி ஓடுகிறது. கிராமங்களில் பயிரிட்ட 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இது தவிர 30 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு செல்லும் வழித்தடங்கள் சேதம் ஆனாதால் பொள்ளாச்சி- பாலக்காடு சாலையை போலீசார் மூடிவிட்டனர். இதனால் எங்கு வழி உள்ளதோ அதில் பஸ் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. தொடர் மழையால் கடந்த 2 நாட்களாக மின் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது.

    இன்னும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால் பாலக்காடு நகர மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

    பாலக்காடு கலெக்டர் பாலமுரளி பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார். கனமழை பெய்வதால் சுற்றுலா பயணிகள் பாலக்காடு வரவேண்டாம் என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். #KeralaFloods2018
    ×