search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Silk stock"

    • உற்பத்தியாளர்கள் கொண்டு வரப்படும் பட்டுக்கூடுகளின் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால் பட்டுக்கூடுகளின் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.பட்டுக்கூடுகள் மீது மழைநீர் படாதவாறு பராமரிக்க வேண்டும்.

    உடுமலை:

    பட்டு வளர்ச்சித்துறை சார்பில் கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு விற்பனை அங்காடி செயல்படுகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெண் பட்டுக்கூடுகளை விவசாயிகள் மற்றும் பட்டு வளர்ப்போர் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    உற்பத்தியாளர்கள் கொண்டு வரப்படும் பட்டுக்கூடுகளின் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பின் பதிவு செய்யப்பட்ட வியாபாரிகள் ஏல முறையில் பட்டுக்கூடுகளை வாங்கிச் செல்கின்றனர். தற்போது இம்மையத்துக்கு 700-1,000 கிலோ வரை பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வருகின்றன.

    குறைந்தபட்ச விலையாக ரூ.400க்கு துவங்கி 700 வரை விற்கப்படுகிறது. குறிப்பாக கோவையில் வளர்க்கப்படும் பட்டுக்கூடுகள் பிற மாவட்டங்கள், கர்நாடகா மாநிலங்களில் நல்ல விலைக்கு கிடைக்கிறது.

    பட்டுக்கூடு வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால் பட்டுக்கூடுகளின் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.பட்டுக்கூடுகள் மீது மழைநீர் படாதவாறு பராமரிக்க வேண்டும்.

    தரம் குறைந்தால் அதன் விலையும் குறையும். ஆகையால் பட்டுக்கூடுகளை பாதுகாப்புடன் விவசாயிகள் வளர்க்க வேண்டும் என்றனர்.

    • ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி டவுன் மூனுகபட்டு முள்ளிபட்டு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு நெசவாளர்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    மேலும் கடந்த சில மாதங்களாக ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கைத்தறி பட்டு புடவை நெய்வதற்கு பதிலாக விசைதறி (பவர் லூம்) புடவை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யபட்டு வருவதாக கூறப்படுகின்றன.

    ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஆரணி கைத்தறி பட்டு நெசவாளர்கள் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தலைவர் பரமாத்தமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஆரணி சுற்றியுள்ள பட்டு கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்றனர்.

    இதில் மத்திய மாநில அரசுகள் ஆரணி சுற்றுவட்டார பகுதியில் விசைத்தறி பட்டு நெய்யபட்டு கைத்தறி பட்டு என்று விற்பனை செய்யபட்டு வருகின்றன.

    விசைத்தறி பட்டு நெய்வதால் கைத்தறி பட்டு நெசவாளர்கள் உற்பத்தி யாளர்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளன.

    கடந்த 3 மாதங்களில் கைத்தறி பட்டு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி செய்யபட்டு விசைதறியால் தேக்கமடைந்துள்ளன.

    ஆகையால் உடனடியாக மத்திய மாநில அரசுகள் விசைதறி நெய்தலை தடுத்து நிறுத்தி கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதரத்தை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் கைத்தறி நெசவாளர்கள் பரணி, பானுப்ரியன், வாசுதேவன், வீரபத்திரன், மற்றும் ஆரணி செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×