என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிளியனூர் அருகே வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்9 Aug 2018 10:55 AM GMT (Updated: 9 Aug 2018 10:55 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே உள்ள உப்புவேலூர் கிராமத்தில் சிலர் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து வீடுகளில் வைத்து விற்பனை செய்வதாக கிளியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைதொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார், தனிபிரிவு போலீஸ்காரர் ராஜாராம் ஆகியோர் உப்பு வேலூர் கிராமத்துக்கு சென்றனர். அப்போதுபோலீசார் வருவதை அறிந்ததும் வீடுகளை பூட்டிவிட்டு ஓடிவிட்டனர்.
பின்னர் போலீசார் ஏழுமலை என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது மனைவி மீனா(வயது35) வீட்டில் வைத்து மதுவிற்பனை செய்து கொண்டிருந்தார்.
உடனே போலீசார் மீனாவை கைது செய்தனர். அவரது வீட்டின் பின்புறம் உள்ள குப்பைகிடங்கில் பதுக்கி வைத்திருந்த 50 மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அதுபோல் அதே பகுதியை சேர்ந்தஅறிவுவரசு(40) என்பவரும் வீட்டில் மதுவிற்றுக்கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைதுசெய்தனர். அவரது வீட்டின் பீரோவில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே உள்ள உப்புவேலூர் கிராமத்தில் சிலர் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து வீடுகளில் வைத்து விற்பனை செய்வதாக கிளியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைதொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார், தனிபிரிவு போலீஸ்காரர் ராஜாராம் ஆகியோர் உப்பு வேலூர் கிராமத்துக்கு சென்றனர். அப்போதுபோலீசார் வருவதை அறிந்ததும் வீடுகளை பூட்டிவிட்டு ஓடிவிட்டனர்.
பின்னர் போலீசார் ஏழுமலை என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது மனைவி மீனா(வயது35) வீட்டில் வைத்து மதுவிற்பனை செய்து கொண்டிருந்தார்.
உடனே போலீசார் மீனாவை கைது செய்தனர். அவரது வீட்டின் பின்புறம் உள்ள குப்பைகிடங்கில் பதுக்கி வைத்திருந்த 50 மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அதுபோல் அதே பகுதியை சேர்ந்தஅறிவுவரசு(40) என்பவரும் வீட்டில் மதுவிற்றுக்கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைதுசெய்தனர். அவரது வீட்டின் பீரோவில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X