search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alcohol bottles smuggling"

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே உள்ள உப்புவேலூர் கிராமத்தில் சிலர் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து வீடுகளில் வைத்து விற்பனை செய்வதாக கிளியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனைதொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார், தனிபிரிவு போலீஸ்காரர் ராஜாராம் ஆகியோர் உப்பு வேலூர் கிராமத்துக்கு சென்றனர். அப்போதுபோலீசார் வருவதை அறிந்ததும் வீடுகளை பூட்டிவிட்டு ஓடிவிட்டனர்.

    பின்னர் போலீசார் ஏழுமலை என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது மனைவி மீனா(வயது35) வீட்டில் வைத்து மதுவிற்பனை செய்து கொண்டிருந்தார்.

    உடனே போலீசார் மீனாவை கைது செய்தனர். அவரது வீட்டின் பின்புறம் உள்ள குப்பைகிடங்கில் பதுக்கி வைத்திருந்த 50 மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அதுபோல் அதே பகுதியை சேர்ந்தஅறிவுவரசு(40) என்பவரும் வீட்டில் மதுவிற்றுக்கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைதுசெய்தனர். அவரது வீட்டின் பீரோவில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    ×