search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவியிடம் ரகளை- தொழிலாளிக்கு வலைவீச்சு
    X

    காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவியிடம் ரகளை- தொழிலாளிக்கு வலைவீச்சு

    விருதுநகர் அருகே கல்லூரி மாணவியிடம் காதலிக்க வற்புறுத்தி ரகளையில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது 19 வயது மகள் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்கு தினமும் பஸ்சில் சென்று வருவார்.

    அப்போது மடத்துப்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் அந்த மாணவியை வழிமறித்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார். மாணவி கண்டித்தும் கார்த்திக் திருந்துவதாக இல்லை.

    இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த மாணவியின் கையைப்பிடித்து கார்த்திக் ரகளையில் ஈடுபட்டார்.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார்த்திக்கை தேடி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×