search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரக்காணம் அருகே வீடு புகுந்து இளம்பெண் கடத்தல்
    X

    மரக்காணம் அருகே வீடு புகுந்து இளம்பெண் கடத்தல்

    இளம்பெண்ணை கடத்திச்சென்றவர்களை கைது செய்யக்கோரி மரக்காணம் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த சிலர், அந்த பெண்ணின் வாயை துணியால் பொத்தி அவரை கடத்திச்சென்று விட்டனர். இதையறிந்த அந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்நிலையில் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு சென்று மரக்காணம் போலீஸ் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

    அப்போது பெண்ணை, அதே கிராமத்தை சேர்ந்த பிரதாப் மற்றும் அவரது நண்பர்கள் கடத்திச்சென்று விட்டதாகவும், அவர்களை உடனே கைது செய்து பெண்ணை மீட்டுத்தரும்படியும் கோஷம் எழுப்பினர்.

    உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்ணை கடத்திச்சென்றவர்கள் மீது விரைவில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
    Next Story
    ×